கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தங்கலான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் 'எக்ஸ்' தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களை 'ஒரு ஹாரர் படத்தில் பேயாக பார்க்க முடியுமா?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், 'என்னை ஏன் பேயாக பார்க்க விரும்புகிறீர்கள்?' என்றார்.
மற்றொருவர், 'உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது?' என்று கேட்டார், அதற்கு, 'அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். 'அடுத்த தமிழ் படம் எது?' என்று ஒருவர் கேட்டதற்கு, 'சர்தார் 2. இதில் நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்' என்றார். தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோகனனிடம், ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்டதற்கு, 'நான் அவரது மிகப்பெரிய ரசிகை' என பதிலளித்தார்.